Sunday, November 24, 2024

கோலம் :-

 வாசல் தெளித்து

கோலமிடும் பெண்... 

நேரம் காலை பத்து மணி.. 

சிரிக்க வேண்டாம்.. 

இது  சிங்காரச் சென்னையின் 

அப்பார்ட்மெண்ட் சாசனம்.... 

உதயத்தில் தான்

கோலமிட வேண்டும் 

என்பது கிராமத்தில் மட்டுமே

இன்றும்.. 

Monday, January 10, 2011

அமைதிப்புரட்சி மாநாடு !

நாங்கள் ஆட்சிக்கு
வந்தால் ..............???
வன்முறையை வேரோடு
சாய்திடுவோம்
 அராஜகத்தை அறவே
 ஒழித்துடுவோம்!

தீவிரவாதத்தை  கருவிலேயே
சிதைத்திடுவோம்!
எதிர்க் கட்சி சதிகளை
எளிதில் முறியடிப்போம்!............ இறுதியில் நடந்த கலவரத்தில் .......
நிறைமாத கர்ப்பமாய் 
நிரம்பிவழிந்தன 
சிறைச்சாலைகள்!

குடை

எங்கேனும் நிழல் கிடைக்குமா?
கண்கள்  விரிய தேடுகின்றன!
வெயிலுக்கு விரிந்த குடை!

கௌரவம்

தூங்கித் தூங்கியே
பொழுதைக் கழிக்கிறான்!
அக்கம் பக்கத்தில்
நல்ல மதிப்பு -அரசாங்க உத்தியோகம்!

Wednesday, September 22, 2010

முடிவு

"மாடு மேய்க்க போ "
மகனை திட்டினார் அப்பா !
 'மந்திரி' ஆகிவிட முடிவெடுத்தான்

மாநாடு

"வறுமை ஒழிப்பு மாநாடு "
ஏழைகள் சிரித்தார்கள்
 இறைவனைமட்டும் -காணோம் !

தீ

ஊர்முழுவதும்
 பற்றி எரிகிறது -சா'தீ'

ஏக்கம்

இந்த சனிப்பெயர்ச்சியிலாவது
 இடமாற்றம் கிடைக்குமா ?
மனவேதனையோடு
 மரத்தடி ஜோசியரின் -கூண்டுக்கிளி !

Tuesday, September 14, 2010

தமிழ்

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த
மாநகர் மதுரையில்
நடந்த முத்தமிழ் மன்ற
 விழாவின் நடுவர் -பேசினார் !
"ஐ ஆம் வெரி ஹேப்பி டு 
அட்டென்ட்  திஸ் ப்ரோக்ராம் "



 
 

Tuesday, August 31, 2010

தேடல்

பூனைக் கண்கள்
 குரங்கு புத்தி
 சிம்மக் குரல்
 யானை பலம்
 புலியின் வன்மம்
 பாம்பின் விஷம்
 நரியின் தந்திரம்
 எருமை வேகம்
 மனிதனை மட்டும்
 காணவில்லை !
 மனிதனுக்குள்!