Wednesday, September 22, 2010

முடிவு

"மாடு மேய்க்க போ "
மகனை திட்டினார் அப்பா !
 'மந்திரி' ஆகிவிட முடிவெடுத்தான்

மாநாடு

"வறுமை ஒழிப்பு மாநாடு "
ஏழைகள் சிரித்தார்கள்
 இறைவனைமட்டும் -காணோம் !

தீ

ஊர்முழுவதும்
 பற்றி எரிகிறது -சா'தீ'

ஏக்கம்

இந்த சனிப்பெயர்ச்சியிலாவது
 இடமாற்றம் கிடைக்குமா ?
மனவேதனையோடு
 மரத்தடி ஜோசியரின் -கூண்டுக்கிளி !

Tuesday, September 14, 2010

தமிழ்

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த
மாநகர் மதுரையில்
நடந்த முத்தமிழ் மன்ற
 விழாவின் நடுவர் -பேசினார் !
"ஐ ஆம் வெரி ஹேப்பி டு 
அட்டென்ட்  திஸ் ப்ரோக்ராம் "